- அன்பின் ஐந்திணை யாவை?
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- பொருள் இலக்கணம் என்றால் என்ன?
- பொருள் என்பது ஒழுக்க முறை.
- அக வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றி கூறுவது பொருள் இலக்கணம் ஆகும்.
- அகத்திணை என்றால் என்ன?
- அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலையைக் கூறுவது அகத்திணை ஆகும்
- அகத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- அகத்திணை ஏழு வகைப்படும். அதை
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- கைக்கிளை
- பெருந்திணை
- அகத்திணை ஏழு வகைப்படும். அதை
- ஐந்து திணைகளுக்கும் உரியன யாவை?
- முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்
- முதற்பொருள் என்றால் என்ன?
- நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்
- நிலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- நிலம் ஐந்து வகைப்படும். அவை,
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- நிலம் ஐந்து வகைப்படும். அவை,
- குறிஞ்சி என்றால் என்ன? மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும்
- முல்லை என்றால் என்ன? காடும் காடு சார்ந்த இடமும் முல்லை ஆகும்
- மருதம் என்றால் என்ன? வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்
- நெய்தல் என்றால் என்ன? கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும்
- பாலை என்றால் என்ன? சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை ஆகும்
- பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- பொழுது இரண்டு வகைப்படும் அவை,
- சிறுபொழுது
- பெரும்பொழுது
- பொழுது இரண்டு வகைப்படும் அவை,
- சிறுபொழுது என்றால் என்ன?
- ஒரு நாளின் 6 கூறுகளைச் சிறுபொழுது என்று பிரித்துள்ளனர்
- பெரும்பொழுது என்றால் என்ன?
- ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று பிரித்துள்ளனர்
- கார் காலத்திற்குரிய மாதங்கள் எவை? ஆவணி புரட்டாசி
- குளிர் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஐப்பசி கார்த்திகை
- முன்பனிக் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? மார்கழி தை
- பின்பனிக் காலத்திற்குரிய மாதங்கள் எவை? மாசி பங்குனி
- இளவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? சித்திரை வைகாசி
- முதுவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஆணி ஆடி
- காலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 6 மணி முதல் 10 மணி வரை
- நண்பகல் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 10 மணி முதல் 2 மணி வரை
- எற்பாடு என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
- மாலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
- யாமம் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 10 மணி முதல் 2 மணி வரை
- வைகறை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- எற்பாடு என்றால் என்ன?எல்-சூரியன், பாடு-மறையும் நேரம். ஏற்பாடு என்பது சூரியன் மறையும் நேரம் ஆகும்
- கருப்பொருள் என்றால் என்ன? ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு முதலானவை கருப்பொருள்கள் ஆகும்.
- குறிஞ்சி நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுதுக
- தெய்வம் -முருகன்
- மக்கள் -குறவர், குறத்தியர்
- உணவு -மலைநெல், தினை
- பூ -குறிஞ்சி, காந்தள்
- முல்லை நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -திருமால்
- மக்கள் -ஆயர் ஆய்ச்சியர்
- உணவு -வரகு சாமை
- பூ -முல்லை தோன்றி
- மருத நிலத்துக்குரிய கருப்பொருள்கள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -இந்திரன்
- மக்கள் -உழவர் உழத்தியர்
- உணவு -செந்நெல் வெண்ணெல்
- பூ -செங்கழுநீர் தாமரை
- நெய்தல் நிலத்துக்குரிய கருப்பொருட்கள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -வருணன்
- மக்கள் -பரதன், பரத்தியர்
- உணவு -மீன், உப்புக்கு பெற்ற பொருள்
- பூ -தாழை, நெய்தல்
- பாலை நிலத்துக்குரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -கொற்றவை
- மக்கள் -எயினர், எயிற்றியர்
- உணவு -சூறையாடலால் வரும்பொருள்
- பூ-குரவம், பாதிரி
Tuesday, March 29, 2022
அகப்பொருள் இலக்கணம் 2 மதிப்பெண் வினாக்கள்
திருக்குறள் 2மதிப்பெண் வினாக்கள்
- அரிய செயலைச் செய்வதற்கு அமைச்சர் அறிந்து கொள்ள வேண்டியவை எவை?
- தொழில் செய்வதற்குத் தேவையான கருவி
- அதற்கு ஏற்ற காலம்
- செயலின் தன்மை
- செய்யும் முறை
- அமைச்சருக்கு உரிய தகுதிகள் எவை?
- மனவலிமை
- குடிகளைக் காத்தல்
- ஆட்சி முறைகளைக் கற்றல்
- நூல்களைக் கற்றல்
- விடாமுயற்சி
- எப்படிப்பட்ட அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது? இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது
- ஓர் அமைச்சர் ஒரு செயலை செய்வதற்கு உரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருந்தாலும் அவர் செய்ய வேண்டுவன யாது? உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்
- பொருளின் சிறப்பு யாது? ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.
- ஒருவருக்கு அறத்தையும் இன்பத்தையும் தருவது எது? முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் தரும்.
- எத்தகைய செல்வத்தை நீக்கிவிட வேண்டும்? மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்
- மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பானது எது? தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செய்யும் செயல்
- ஒருவர் செல்வத்தை ஏன் சேர்க்க வேண்டும்? ஒருவர் பொருளை ஈட்டவேண்டும். அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.
- பகைவரின் அழுத கண்ணீரின் உள்ளே வஞ்சகம் மறைந்து இருப்பது எதனோடு ஒப்பிடப்படுகிறது?பகைவரின் தொழுது நிற்கும் கையினுள் கொலைக்கருவி மறைந்திருப்பதற்கு ஒப்பானது
- யாரால் பகைவரை எதிர்கொள்ள இயலாது?
- சுற்றத்தாருடன் அன்பு இல்லாதவர்
- பொருந்திய துணை இல்லாதவர்
- வலிமை இல்லாதவர்
- பகைக்கு எளிதில் ஆட்படுபவர் யார்?
- மனதில் அன்பு இல்லாதவர்
- அறிய வேண்டியவற்றை அறியாதவர்
- பொருந்தும் பண்பு இல்லாதவர்
- பிறருக்குக் கொடுத்து உதவாதவர்
- யாருடைய குடி உயர்ந்து நிற்கும்?
- விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து நிற்கும்
- யாரை உலகத்தார் உறவாக கொண்டு போற்றுவார்?
- குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்
- ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது? வறுமை
- வறுமையின் கொடுமை எப்போது முழுவதும் கெடும்? தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்
- இரப்பவரின் உள்ளத்தினுள்ளே எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்? இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தினுள்ளே மகிழ்ச்சி பொங்கும்
- எதைப் போன்ற தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது? மக்களைப் போன்ற கயவர்களின் தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது
- தேவரும் கயவரும் ஒரே தன்மையர் எவ்வாறு? தேவர்களைப் போல கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவார்.
- சான்றோர் எப்போது பயன்படுவர்? கயவர் எப்போது பயன்படுவர்?
- ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்ட உடனே சான்றோர் உதவி செய்வர்
- கரும்பைப் பொழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் கயவர் பயன்படுவர்
மெய்க்கீர்த்தி 2 மதிப்பெண் வினாக்கள்
- மெய்க்கீர்த்தி என்றால் என்ன? கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகளே மெய்க்கீர்த்திகள் ஆகும்
- இரண்டாம் இராஜராஜ சோழன் யாரைப் போல ஆட்சி நடத்தினான்? இந்திரன் முதலாகத் திசை பாலகர் எட்டு பேரும் ஓர் உருவம் பெற்றது போல ஆட்சி செலுத்தினான்.
- இரண்டாம் ராஜராஜ சோழன் பெற்ற பட்டங்கள் எவை? கோப்பரகேசரி, திரிபுவனச் சக்கரவர்த்தி
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிணிக்கப்படுவன, புலம்புவன, கலக்கமடைவன, அடைக்கப்படுவன எவை?
- பிணிக்கப்படுவன -யானைகள்
- புலம்புவன -சிலம்புகள்
- கலக்கமடைவன- ஓடைகள்
- அடைக்கப்படுவன -ஆற்றுநீர்
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வடுப்படுவன, பறிக்கப்படுவன, கொடியன, கள்ளுண்பன எவை?
- வடுப்படுவன-மாங்காய்கள்
- பறிக்கப்படுவன-மலர்கள்
- கொடியன-காடுகள்
- கள்ளுண்பன-வண்டுகள்
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வெறுமையாய்த் தோன்றுவன, போராய் எழுவன, இருள் சூழ்ந்தன, மருள்வன எவை?
- வெறுமையாய்த் தோன்றுவன-மூங்கில்கள்
- போராய் எழுவன-நெற்கதிர்கள்
- இருள் சூழ்ந்தன-நீண்ட மலைகள்
- மருள்வன-இளமான்கள்
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிறழ்வன, சினம் காட்டுபவர், பொருள் மறைத்து வைப்பவர், தெருவில் கடிஆடிப்பாடுபவர் யாவர்?
- பிறழ்வன-குளத்து மீன்கள்
- சினம் காட்டுபவர்-செவிலித் தாயார்
- பொருள் மறைத்து வைப்பவர்-புலவர்கள்
- தெருவில் கூடி ஆடிப்பாடுபவர்-இசைப்பாணர்
- இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு நிலை யாது?
- இரண்டாம் ராஜராஜ சோழன் தந்தை இல்லாதவருக்குத் தந்தையாக இருக்கிறான்
- தாய் இல்லாதவருக்குத் தாயாக இருக்கிறாள்
- மகன் இல்லாதவருக்கு மகனாக இருக்கிறான்
- உலகிலுள்ள உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கிறான்.
- இரண்டாம் ராஜராஜ சோழன் எவ்வாறெல்லாம் ஒப்பிடப்படுகிறார்?
- விழி பெற்ற பயன்
- மெய் பெற்ற அருள்
- மொழி பெற்ற பொருள்
- புகழ் பெற்ற நூல்
- மெய்க்கீர்த்தி -தோற்றம் குறித்து எழுதுக
- சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களில் உள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி
- பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்டது
- சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி என்ற செப்பமான வடிவம் பெற்றது
சிலப்பதிகாரம் 2 மதிப்பெண் வினாக்கள்
- கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு எவ்வழியாகச் சென்றனர்?
- காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் எனும் இடத்தை அடைந்தனர்
- அங்கிருந்து தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்
- அல்லது அங்கிருந்து சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால் திருமால் குன்றம் வழியாக மதுரையை அடையலாம்
- இவ்விரண்டிற்கும் இடையில் சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன
- அந்த இடைப்பட்ட வழியிலேயே கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றார்.
மங்கையராய்ப் பிறப்பதற்கே 2 மதிப்பெண் வினாக்கள்
- எம் எஸ் சுப்புலட்சுமி பெற்ற விருதுகள் யாவை?
- தாமரையணி விருது-1954
- மகசேசே விருது-1974
- இந்திய மாமணி விருது-1998
- எம் எஸ் சுப்புலட்சுமி தாம் மறக்கமுடியாத நிகழ்வாக எதைக் குறிப்பிடுகிறார்?
- 1954இல் தாமரையணி விருது பெற்றபோது, பார்வையற்ற ஹெலன் கெல்லர் தன்னைத் தொட்டுப்பார்த்துப் பாராட்டியதை மறக்க முடியாது என்கிறார்
- 'ஹரி தும் ஹரோ' என்னும் பாடலை எம்எஸ் சுப்புலட்சுமி பாடக் காரணமாக அமைந்த நிகழ்வு எது?
- ஒருமுறை எம்எஸ் சுப்புலட்சுமி, காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்தபோது 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற பாடலைப் பாடினார்
- மிகவும் பாராட்டிய காந்தியடிகள், மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார்
- பின் சிறிது நாள்களில் எம்எஸ் சுப்புலட்சுமி, முனைந்து அந்தப்பாடலைக் கற்றுப் பயிற்சி செய்தார்
- சென்னை வானொலியில் 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 'ஹரி தும் ஹரோ' என்னும் 'மீரா பஜன்' பாடல் ஒளிபரப்பானது.
- எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் இசைச் சூழல் பற்றி எழுதுக
- மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் தாயார் வீணைக் கலைஞர் ஆவார். அவரே எம் எஸ் சுப்புலட்சுமியின் முதல் குரு.
- எம் எஸ் சுப்புலட்சுமி, இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடிப் பதிவு செய்தார்
- இசை மேதைகளின் வழிகாட்டுதல்களில் தன்னை வளர்த்துக்கொண்டார்
- எம் எஸ் சுப்புலட்சுமி எந்தெந்த மொழிகளில் பாடியுள்ளார்?
- தமிழ்
- தெலுங்கு
- கன்னடம்
- சமஸ்கிருதம்
- மலையாளம்
- இந்தி
- மராத்தி
- குஜராத்தி
- ஆங்கிலம்
- எம் எஸ் சுப்புலட்சுமியின் இசைக்கு கிடைத்த மகுடம் எது?
- 1974இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றார்
- இவ்விருது பெறும் முதல் இசைக்கலைஞர் எம் எஸ் சுப்புலட்சுமி ஆவார்.
- மீரா திரைப்படம் குறித்து எம் எஸ் சுப்புலட்சுமி கூறுவது என்ன?
- மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.
- அது எனது கடைசித் திரைப்படமாகவும் அமைந்தது.
- மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பாடல்களாக எம் எஸ் சுப்புலட்சுமி கூறுவது யாது?
- காற்றினிலே வரும் கீதம்
- பிருந்தாவனத்தில் கண்ணன்
- இங்கிலாந்திலும் ஐநா அவையிலும் எம் எஸ் சுப்புலட்சுமி எப்போது பாடினார்?
- இங்கிலாந்து-1963
- ஐநா அவை-1966
- எம் எஸ் சுப்புலட்சுமியின் குரல் எப்போது எவ்வடிவில் திருப்பதியில் ஒலித்தது?
- 1966
- வெங்கடேச சுப்ரபாதம்
- பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்று தந்தது எது?
- டோக்கியோவில் உள்ள 'கிழக்கு மேற்கு சந்திப்பு' நிகழ்வில் இந்தியாவின் சார்பாக பாலசரஸ்வதி கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினார். இந்நிகழ்வு பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது.
- நடன கலைஞர் பாலசரஸ்வதி அவர்களின் தொடக்க கால நடன அரங்கேற்றம் பற்றிக் கூறுக.
- காஞ்சிபுரத்தில் ஏழு வயதாக இருக்கும்போது முதன் முதலில் மேடை ஏறினார்
- 15 வயதில் சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடனமாடினார்
- பால சரஸ்வதியின் நடன நிகழ்ச்சியைப் பார்த்த பிறகே பலரும் மரபுசார் நாட்டியத்தை வரவேற்கத் தொடங்கினார்கள்.
- பால சரஸ்வதிக்குப் பல வாய்ப்புகள் வரக் காரணம் யாது?
- சென்னையில் பால சரஸ்வதியின் கச்சேரியைப் பார்த்த பண்டிட் ரவி சங்கர் மிகவும் பாராட்டினார்
- பண்டிட் ரவிசங்கரின் தம்பியின் மூலமாக வட இந்தியாவின் பல இடங்களில் நடனமாடும் வாய்ப்பைப் பெற்றார்
- பால சரஸ்வதியின் 'ஜனகணமன' பாடலுக்கு நடனமாடிய நிகழ்வு யாது?
- பாலசரஸ்வதி கல்கத்தாவிலும் காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்தியத் தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய 'ஜனகணமன' பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடியுள்ளார்.
- அதுவே அவர், நாட்டுப் பண்ணுக்கு நடனமாடிய முதலும் இறுதியுமான நிகழ்வாகும்
- ராஜம் கிருஷ்ணனின் புதினங்கள் யாவை?
- பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
- கரிப்பு மணிகள்
- அலைவாய்க் கரையில்
- சேற்றில் மனிதர்கள்
- வேருக்கு நீர்
- கூட்டுக் குஞ்சுகள்
- மண்ணகத்துத் பூந்துளிகள்
- குறிஞ்சித் தேன்
- ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களின் தனித்துவம் யாது?
- சமூகச் சிக்கல்களை எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று களப்பணி ஆற்றி, கதைகளாக உருவாக்குவார்.
- ராஜம் கிருஷ்ணன் எழுதிய இலக்கிய வடிவங்கள் எவை?
- புதினங்கள்
- சிறுகதைகள்
- கட்டுரைகள்
- குறுநாவல்
- குழந்தை இலக்கியம்
- வரலாற்று நூல்
- அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினங்கள் எவை?
- சேற்றில் மனிதர்கள்
- வேருக்கு நீர்
- கூட்டுக் குஞ்சுகள் புதினம் எதைப் பற்றியது?
- குழந்தைகள் தீப்பெட்டித் தொழிலில் முடங்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதைப் போன்று குழந்தைகளின் உடலையும் மனத்தையும் நொறுக்கும் அவல உலகைக் 'கூட்டுக் குஞ்சுகள்' புதினமாகக் காட்டுகிறது
- 'மண்ணகத்துப் பூந்துளிகள்' புதினத்தின் கதைக் களம் யாது?
- பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதியதே 'மண்ணகத்துப் பூந்துளிகள்'
- ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோள் யாது? எழுத்துக்களில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்
- குறிஞ்சித்தேன் புதினத்தின் கதைக்களம் யாது? நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்ததே 'குறிஞ்சித்தேன்' புதினமாகும்.
- கரிப்பு மணிகள் புதினம் யாருடைய வாழ்க்கை பற்றியது? தூத்துக்குடியில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை 'கரிப்பு மணிகள்' புதினம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெற்ற விருதுகள் யாவை?
- இந்திய அரசின் தாமரைத் திரு விருது
- ஸ்வீடன் அரசின் வாழ்வுரிமை விருது
- சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது
- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஈடுபட்ட விடுதலைப் போராட்டங்கள் எவை?
- ஒத்துழையாமை இயக்கம்
- சட்டமறுப்பு இயக்கம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- இந்திய விடுதலைக்குப் பின்பு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் செய்த சேவை யாது?
- கணவருடன் இணைந்து பூதான இயக்கத்தில் பணிபுரிந்தார்
- 'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்
- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் சொல்ல விரும்பும் செய்தி யாது?
- உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்.
- மதுரை சின்னப்பிள்ளை தொடங்கிய 'களஞ்சியம்' பற்றி எழுதுக.
- பத்து பேரோடு ஆரம்பித்த மகளிர் குழு, இன்று பல மாநிலங்களில் கிளைவிட்டுப் பல லட்சம் பேருடன் இயங்கி வருகிறது. 30 ஆண்டுகளாக முகம் சுளிக்காமல் சின்னப்பிள்ளை பணியாற்றி வருகிறார்.
- மதுரை சின்னப்பிள்ளை பெற்ற விருதுகள் யாவை?
- பெண் ஆற்றல் விருது
- ஔவை விருது
- பொதிகை விருது
- தாமரைத்திரு விருது
- மதுரை சின்ன பிள்ளையின் மகளிர் குழு செய்த பணி யாது?
- பெண்களெல்லாம் குழுவாக சேர்ந்தனர்
- விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தனர்
- நடவு, களையெடுப்பு, அறுவடை போன்ற வேலைகளைச் செய்தனர்.
- வருகிற கூலியைச் சரிசமமாகப் பிரித்தனர்
- இதில் வயதானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து வேலை கொடுத்தனர்
- அவர்கள் குடும்பத்திற்கும் உதவியாக இருந்தனர்.
- மதுரை சின்னப்பிள்ளை இந்தியாவின் முதன்மை அமைச்சரிடம் விருது பெற்ற நிகழ்வைக் கூறுக
- டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வின்போது, இந்தியாவின் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்கள் சின்னப் பிள்ளையின் காலில் விழுந்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சின்னப்பிள்ளையின் உடல் நடுங்கி, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
மங்கையராய்ப் பிறப்பதற்கே 1 மதிப்பெண் வினாக்கள்
- தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐநா அவையில் பரப்பும் வகையில் அங்கு தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
- 'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் யார்? எம் எஸ் சுப்புலட்சுமி
- இசைப் பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
- எம் எஸ் சுப்புலட்சுமி பெயர் விரிவாக்கம் தருக. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
- எம் எஸ் சுப்புலட்சுமிக்கு முதல் குரு யார்? எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார்
- எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார் எவ்வகை இசைக் கலைஞர்? வீணை
- எம் எஸ் சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை கல்வி கற்றார்? ஐந்தாம் வகுப்பு
- எம்எஸ் சுப்புலட்சுமி எந்த வயதில் சென்னை மியூசிக் அகடமியில் கச்சேரி செய்தார்? 17
- எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் எது? மீரா
- எம் எஸ் சுப்புலட்சுமியின் கடைசி திரைப்படம் எது? மீரா
- எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பாடல்கள் எவை? காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்
- எம் எஸ் சுப்புலட்சுமி எதைப் பெருமையாக கருதினார்? ஜவர்கலால் நேரு, சரோஜினி நாயுடு போன்ற பெரியவர் பாராட்டியதை...
- எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய பாடல்களில் எந்தப் பாடலை காந்தியடிகள் பாராட்டினார்? ரகுபதி ராகவ ராஜாராம்
- காந்தியடிகள் எம்எஸ்சுப்புலட்சுமியிடம் எந்தப் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்? ஹரி தும் ஹரோ
- ஹரி தும் ஹரோ பாடல் சென்னை வானொலியில் எந்த ஆண்டு ஒளிபரப்பானது? 1947 காந்தி அடிகள் பிறந்த நாள் அன்று.
- எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி தாமரையணி விருது பெற்றார்? 1954
- எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமி ஹெலன் கெல்லரால் பாராட்டு பெற்றார்?1963
- எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி ஐநா சபையில் பாடினார்? 1966
- எந்த ஆண்டு முதல் எம்எஸ் சுப்புலட்சுமியின் குரல் திருப்பதியில் ஒலித்தது? 1966
- எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமிக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது? 1974
- மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
- இந்திய மாமணி விருது எம் எஸ் சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்ட ஆண்டு எது? 1998
- இந்தியாவின் மிக உயரிய விருது எது? இந்திய மாமணி
- பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டு இருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் யார்? பாலசரஸ்வதி
- பாலசரஸ்வதி இந்திய அரசு வழங்கிய விருது எது? தாமரைச் செவ்வணி
- சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சியைப் பாலசரஸ்வதி தொடங்கியபோது வயது என்ன? 15
- மரபுசார் நாட்டியத்தை பலரும் தீவிரமாக வரவேற்கக் காரணமாக இருந்தவர் யார்? பாலசரஸ்வதி
- 'ஜன கண மன' பாடலை பாலசரஸ்வதி மெய்ப்பாடுகளுடன் எங்கெங்கு நடனமாடியுள்ளார்? கல்கத்தாவிலும் காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாடு மற்றும் சென்னையில் நடந்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் கண்காட்சி.
- பரத நாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தவர் யார்? பாலசரஸ்வதி
- எந்தக் கலையை முறையாக அணுகினால் ஆன்மீகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும்? பரதநாட்டியக் கலை
- தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக் காரணமாக இருந்தவர் யார்? பாலசரஸ்வதி
- தமிழில் எழுதிய பெண்களில் முதல் முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டி கதைகள் எழுதியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
- ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது? வேருக்கு நீர்
- ராஜம் கிருஷ்ணன் எழுதிய பாரதியின் வரலாற்று புதினம் எது? பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
- தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைச் சொல்லும் புதினம் எது? கரிப்பு மணிகள்
- நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து பதிவு செய்த புதினம் எது? குறிஞ்சித் தேன்
- கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களை பேசும் புதினம் எது? அலைவாய்க் கரையில்
- அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினங்கள் எவை? சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர்
- தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய புதினம் எது? கூட்டுக் குஞ்சுகள்
- பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புதினம் எது? மண்ணகத்துப் பூந்துளிகள்
- ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோள் யாது? எழுத்துக்களில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்.
- மதுரையின் முதல் பட்டதாரி பெண் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போராடிக் கல்வி கற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- உழுபவனுக்கே நிலம் உரிமை இயக்கம் தொடங்கியவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- "உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்" என்பது யாருடைய கூற்று? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- காந்திய சிந்தனைகளால் ஈர்கப்பட்டு கணவருடன் பூதான இயக்கத்தில் இணைந்து பணிபுரிந்தவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
- களஞ்சியம் என்பது யாது? மகளிர் சுய உதவிக் குழு
- 2018இல் தமிழக அரசின் ஔவை விருது பெற்றவர் யார்? சின்னப்பிள்ளை
- சின்னப்பிள்ளை இந்திய நாட்டின் முதன்மை அமைச்சரிடம் இருந்து பெற்ற விருது யாது? பெண் ஆற்றல் விருது
சங்க இலக்கியத்தில் அறம் 2 மதிப்பெண் வினாக்கள்
- வெட்சித் திணை என்றால் என்ன?
- மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளைச் சொத்தாக கருதினர்
- ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது
- ஆநிரை கவர்ந்து வர வெட்சிப் பூவைச்சூடிக் கொண்டு செல்வர்
- எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித்திணை எனப்பட்டது.
- கரந்தைத் திணை என்றால் என்ன?
- கவர்ந்து செல்லப்பட்ட தன் ஆநிரைகளை மீட்கச் செல்லும்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர்
- அதனால் கரந்தைத்திணை என்று பெயர் பெற்றது
- வஞ்சித் திணை என்றால் என்ன?
- மண் சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று
- மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப் பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித் திணை ஆகும்.
- காஞ்சித் திணை என்றால் என்ன?
- தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப் பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித் திணை ஆகும்
- நொச்சித் திணை என்றால் என்ன?
- மண்ணைக் காக்க கோட்டைகள் கட்டப்பட்டன
- கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகை அரசனோடு நொச்சிப் பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித் திணை
- உழிஞைத் திணை என்றால் என்ன?
- மாற்றார் அரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத் திணையாகும்
- தும்பைத் திணை என்றால் என்ன?
- பகை வேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தன் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத்திணை
- போர்புரிகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப்பூ மாலையையே சூடி இருப்பார்கள்
- வாகைத் திணை என்றால் என்ன?
- போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூவைச் சூடி மகிழ்வது வாகைத் திணை
- பாடாண் திணை என்றால் என்ன?
- பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை
- பொதுவியல் திணை என்றால் என்ன?
- வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுள் பொதுவானவைப் பற்றியும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
- பெருந்திணை என்றால் என்ன? பொருந்தாக் காமத்தைக் குறிப்பது பெருந்திணை ஆகும்
- கைக்கிளை என்றால் என்ன? கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்.
- வெட்சிப்பூ குறிப்பு வரைக
- அழகுச் செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்ற சிவந்த நிறமுடையது வெட்சிப் பூ
- இது இட்லிப்பூ என்று அழைக்கப்படுகிறது
- கரந்தைப் பூ குறிப்பு வரைக
- சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக்கூடிய கரந்தை ஒரு சிறிய செடி
- இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது
- இதனைக் கொட்டைக்கரந்தை என்றும் கூறுவர்
- வஞ்சிப் பூ குறிப்பு வரைக
- பளபளப்பான மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்து உள்ளது
- காஞ்சிப் பூ குறிப்பு வரைக
- கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள பூ
- இது ஒருவகைக் குறுமரம்
- நொச்சிப் பூ குறிப்பு வரைக
- மருத நிலத்துக்குரிய நொச்சி கொத்து கொத்தான நீலநிற பூக்கள் கொண்டது
- இது மணி நொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெள்ளை நொச்சி எனப் பல வகைகள் உள்ளன
- உழிஞைப்பூ குறிப்பு வரைக
- வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடி உழிஞைக்கொடி
- இதன் கூட்டிலைகளும் மலர்களும் சிறியவை
- மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- இதனை முடக்கத்தான் எனக் கூறுகின்றனர்
- தும்பைப்பூ குறிப்பு வரைக
- எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தூய வெள்ளை நிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை.
- வாகைப்பூ குறிப்பு வரைக
- மங்கிய வெள்ளை நிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ
Subscribe to:
Posts (Atom)