Tuesday, March 29, 2022

கோபல்லபுரத்து மக்கள் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. கிராமத்து விருந்தோம்பல் எத்தகையது?
    • பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கின்ற நேயம் கிராமத்து விருந்தோம்பல் ஆகும்
  2. கோபல்லபுரத்து மக்கள் கதையில் கொத்தாளியின் கூற்று யாது?
    • வரட்டும் வரட்டும்; ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்.
  3. லாட சன்னியாசிகள் வேட்டி கட்டி இருக்கும் விதத்தை கூறு.
    1. இடுப்பை மறைத்த வேட்டி அதன் இரண்டு சொருகுநுனிகளும் குறுக்க மறுக்க மார்பின் மேல் ஏறிப் பிடரியில் வந்து முடிச்சாகி இருக்கும்.
    2. வேட்டியே வேட்டியும் மேல்வேட்டியுமாக இருக்கும்
  4. அன்னமய்யாவின் கூட வந்தவனின் தோற்றம் யாது?
    1. தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமும் வயோதிகன் போலவும் சாமியாரைப் போலவும் இருந்தது.
    2. ஆனால் அவன் இளைஞன். அவன் கண்களில் தீட்சண்யம் தெரிந்தது.
  5. வாலிபன் அன்னமய்யாவிடம் என்ன கேட்டான்?
    • தம்பி, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?
  6. கலயங்களின் வாய் எதன்கொண்டு மூடப்பட்டிருந்தது?
    • தேங்காய் பருமனுள்ள கற்கள் கொண்டு மூடப்பட்டிருந்தது
  7. கரிசல் இலக்கியம் பற்றிக் குறிப்பு வரைக
    1. கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம் ஆகும்.
    2. காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
    3. கரிசல் இலக்கியத்தை முதலில் எழுதியவர் கு. அழகிரிசாமி
    4. கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்
  8. கரிசல் இலக்கியப் பரம்பரை யாவர்?
    1. பா செயப்பிரகாசம்
    2. பூமணி
    3. வீர வேலுச்சாமி
    4. சோ தர்மன்
    5. வேல ராமமூர்த்தி, இன்னும் பலர்
  9. இளைஞனின் பெயர் என்ன? அவன் தன்னை எவ்வாறு கூப்பிடச் சொன்னான்?
    1. பரமேஸ்வரன்
    2. மணி
  10. கோபல்லபுரத்து மக்கள் - குறிப்பு வரைக
    1. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்
    2. இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
    3. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது
    4. 1991ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது
  11. கி.ராஜநாராயணன் குறிப்பு வரைக.
    1. 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்
    2. இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்
    3. இவரின் கதைகள் அனைத்தும் 'கி ராஜநாராயணன் கதைகள்' எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன
    4. "கரிசல் வட்டாரச் சொல் அகராதி" ஒன்றை உருவாக்கியுள்ளார்
    5. இவர் தொடங்கிய வட்டார மரபு புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகிறது
    6. எழுத்துலகில் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்

தொகாநிலைத்தொடர்கள் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு தொடரில் இரு சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து நிற்காமல், அப்படியே பொருள் தருவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
    2. எ.கா. காற்று வீசியது
  2. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும். அவை,
      1. எழுவாய்த் தொடர்
      2. விளித்தொடர்
      3. வினைமுற்றுத் தொடர்
      4. பெயரெச்சத் தொடர்
      5. வினையெச்சத் தொடர்
      6. வேற்றுமைத் தொடர்
      7. இடைச்சொல் தொடர்
      8. உரிச்சொல் தொடர்
      9. அடுக்குத் தொடர்
  3. எழுவாய்த்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. எழுவாயுடன் பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடராகும்
    2. பயனிலைகள் பெயர், வினை, வினா என மூவகைப்படும்
    3. எ.கா. காவிரி பாய்ந்தது
  4. விளித்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. விளிச்சொல்லை அடுத்து வினைச்சொல் தொடர்வது  விளித்தொடராகும்.
    2. எ.கா. நண்பா எழுது!
  5. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. வினைமுற்றை அடுத்து பெயர்ச்சொல் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்
    2. எ.கா. பாடினாள் கண்ணகி
  6. பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. எச்சவினை, பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் ஆகும்
    2. எ.கா. கேட்ட பாடல்
  7. வினையெச்சத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. எச்சவினை, வினையைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் ஆகும்
    2. எ.கா. பாடி மகிழ்ந்தனர்
  8. வேற்றுமைத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர் வேற்றுமைத் தொடர் ஆகும்
    2. எ.கா. கட்டுரையைப் படித்தாள்
    3. இத்தொடரில் 'ஐ' என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
  9. "அன்பால் கட்டினார்" என்பது எவ்வகைத் தொகாநிலைத் தொடர் ஆகும்?
    1. அன்பால் கட்டினார்-இத்தொடரில் 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருளை உணர்த்துகிறது.
    2. எனவே, இது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்
  10. "அறிஞருக்குப் பொன்னாடை" என்பது எவ்வகைத் தொகாநிலைத்தொடர் ஆகும்?
    1. அறிஞருக்குப் பொன்னாடை-இத்தொடரில் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருளை உணர்த்துகிறது.
    2. எனவே, இது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.
  11. இடைச்சொல் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. இடைச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடராகும்
    2. எ.கா. மற்றொன்று
    3. 'மற்று' என்னும் இடைச்சொல்லை அடுத்து 'ஒன்று' என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
  12. உரிச்சொல் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. உரிச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
    2. எ.கா. சாலச் சிறந்தது
  13. அடுக்குத்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்
    2. எ.கா. வருக! வருக! வருக!
  14. கூட்டுநிலைப் பெயரெச்சம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
    1. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சவினைகள், பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம் ஆகும்
    2. 'செய' என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை அடுத்து "வேண்டிய, கூடிய, தக்க, வல்ல"  முதலான பெயரெச்சங்கள் தொடர்வது கூட்டுநிலைப் பெயரெச்சம் ஆகும்.
    3. எ.கா. கேட்க வேண்டிய பாடல்
  15. 'சொல்லத் தக்க செய்தி'- எவ்வாறு கூட்டு நிலைப் பெயரெச்சமாகிறது எனக் காட்டு.
    1. சொல்லத் தக்க செய்தி- இதில் 'சொல்ல' என்பது 'செய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஆகும்.
    2. 'தக்க செய்தி' என்பது பெயரெச்சம் ஆகும்.
    3. 'செய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்தை அடுத்து பெயரெச்சம் தொடர்ந்து வந்துள்ளதால், இது 'கூட்டு நிலைப் பெயரெச்சம்' ஆகிறது.
  16. இறங்கினார்  முகமது- என்பது எவ்வகைத்  தொகாநிலைத் தொடர் ஆகும்?
    1. இறங்கினார்  முகமது - இதில் 'இறங்கினார்' என்னும் வினைமுற்றை அடுத்து 'முகமது' என்னும் பெயர் தொடர்ந்து வந்துள்ளது.
    2. இவ்வாறு வினைமுற்றை  அடுத்து பெயர் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்
  17. அவர் பாடகர்-இது எவ்வகைத் தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
    1. அவர் பாடகர்- 'அவர்' என்பது எழுவாய். 'பாடகர்' என்பது பயனிலை.
    2. எழுவாயை அடுத்து பயனிலை தொடர்ந்து வருவது எழுவாய்த் தொடர் ஆகும்.
  18. பாடுவதும் கேட்பதும்-எவ்வகை தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
    1. பாடுவதும் கேட்பதும்- இதில் 'உம்' என்னும் இடைச்சொல்லை அடுத்து வினைச்சொல் வந்துள்ளது.
    2. இடைச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடராகும்.
  19. கேட்ட பாடல்கள், கேட்காத பாடல்கள்- இவை எவ்வகைத் தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
    1. கேட்ட பாடல்கள்-இதில் 'கேட்ட' என்னும் எச்சவினை, 'பாடல்கள்' என்னும் பெயரைக்கொண்டு தொடர்ந்து வந்துள்ளதால், இது பெயரெச்சத் தொடராகும்.
    2. கேட்காத பாடல்கள்- இதில் 'கேட்காத' என்னும் எச்சவினை, 'பாடல்கள்' என்னும் பெயரைக்கொண்டு தொடர்ந்து வந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் ஆகும். இதில் 'கேட்காத' என்னும் எதிர்மறைச் சொல் வந்துள்ளதால், இது 'எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்' ஆகும்.
  20. அடுக்கு அடுக்காக, பழகப் பழக-என்னும் தொடர்கள் எவ்வகைத் தொகாநிலைத் தொடர் எனக் கூறு.
    1. அடுக்கு அடுக்காக- இதில் 'அடுக்கு' என்னும் சொல் இரண்டு முறை அடுக்கி வந்துள்ளதால், இது அடுக்குத்தொடர் ஆகும்.
    2. பழகப்பழக-இதில் 'பழக' என்னும் சொல் இரண்டு முறை அடுக்கி வந்துள்ளதால், இது அடுக்குத்தொடர் ஆகும்.
  21. வந்தார் அண்ணன்-எவ்வகைத் தொடர்?
    1. வந்தார் அண்ணன்-'வந்தார்' என்னும் வினைமுற்று 'அண்ணன்' என்னும்  பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
    2. இவ்வாறு வினைமுற்றுச் சொல் பெயரைக் கொண்டு முடிவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
  22. வடித்த கஞ்சி, நன்றாகப் பேசினான்-இவை எவ்வகைத் தொகாநிலைத் தொடர்கள் என்று கூறு.
    1. வடித்த கஞ்சி- இதில் 'வடித்த' என்னும் எச்சவினை, 'கஞ்சி' என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளதால், இது பெயரெச்சத் தொடர் ஆகும்.
    2. நன்றாகப் பேசினான்- இதில் 'நன்றாக' என்னும் எச்சவினை, 'பேசினான்' என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர் ஆகும்
  23. கவிதைகளின் தொகுப்பு-இது எவ்வகைத் தொகாநிலைத் தொடர்?
    • கவிதைகளின் தொகுப்பு-இதில் 'இன்' என்னும் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருள் உணர்த்தியமையால், இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.

இயல் 3 திருக்குறள்-இரண்டு மதிப்பெண் வினாக்கள்

  1. ஒழுக்கத்தை ஏன் உயிரை விட மேலானதாகக் கருதி காக்க வேண்டும்?
    • ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால்...
  2. ஒழுக்கம் உடையவர் எந்த நிலையை அடைவர்? ஒழுக்கம் இல்லாதவர் எந்த நிலையை அடைவர்?
    1. ஒழுக்கம் உடையவர் மேன்மை அடைவர்
    2. ஒழுக்கம் இல்லாதவர் அடையக் கூடாத பழியை அடைவர்
  3. யார் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்?
    • நல்ல பண்புகளை உடைய உயர்ந்தாரோடு ஒத்து வாழக் கல்லாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்
  4. அறிவு எனப்படுவது எது?
    • எந்தப் பொருள் எந்த இயல்பானதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
  5. எப்போது ஆசை, சினம், அறியாமை ஆகியவற்றால் வரும் துன்பம் அழியும்?
    • ஆசை, சினம், அறியாமை அழியும்போது அவற்றால் வரும் துன்பமும் அழியும்
  6. அரியவற்றுள் எல்லாம் அரியது எது?
    • பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே அரியவற்றுள் எல்லாம் அரியது.
  7. எப்படிப்பட்ட மன்னன் தானே அழிவான்?
    • குற்றம் கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரின் துணை இல்லாத மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.
  8. பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது எது?
    • நற்பண்பு உடையவரின் நட்பை கைவிடுவது...
  9. கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரான செயல் எது?
    • அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு 'முறையற்ற வரி' விதிப்பது, ஆயுதங்களைக் காட்டி கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரானது.
  10. எப்படிப்பட்ட மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்?
    • தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன், தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்.
  11. இரக்கமில்லாத கண்கள் எதனுடன் ஒப்பிடப்படுகிறது?
    • பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
    • அதுபோல, இரக்கமில்லாத கண்களால் பயனில்லை.
  12. இந்த உலகம் யாருக்கு உரிமையானது?
    • நடுவுநிலைமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இந்த உலகம் உரிமை உடையதாகும்.
  13. யார், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்?
    • விரும்பத்தகுந்த இரக்க இயல்பு கொண்டவர், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்.
  14. பெருமை தருவது எது?
    1. ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோர்வு அடையாமல் இருக்க வேண்டும்
    2. அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.
  15. யாரால் பிறருக்கு உதவ முடியும்?
    • விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவ முடியும்.
  16. யாரிடம் செல்வம் பெருகும்? யாரிடம் வறுமை வந்து சேரும்?
    1. முயற்சி உடையவரிடம் செல்வம் பெருகும்
    2. முயற்சியே இல்லாதவரிடம் வறுமையே வந்து சேரும்.
  17. இழிவு இல்லாதது எது? இழிவானது எது?
    1. ஐம்புலன்களில் ஏதேனும் குறை இருந்தால், அது இழிவன்று.
    2. அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவாகும்.
  18. யாரால் முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்?
    • சோர்வு இல்லாது முயற்சி செய்பவரால், முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்.
  19. யாருடைய செல்வத்தால் பயன் இல்லை?
    • பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவரிடம் உள்ள செல்வத்தால் பயன் ஏதுமில்லை.
  20. பிறருக்கு உதவி செய்யாதவன் பெற்ற செல்வம் எதைப் போன்றது?
    • ஊரின் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது.
  21. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு-இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
    • உவமை அணி
  22. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
    • எடுத்துக்காட்டு உவமையணி
  23. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
    • உவமை அணி.

எழுத்து சொல் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. இலக்கணத்தின் பயன் யாது?
    1. மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுகிறது
    2. மொழியின் சிறப்புகளை அறிய உதவுகிறது
  2. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
      1. உயிர்மெய்
      2. ஆய்தம்
      3. உயிரளபெடை
      4. ஒற்றளபெடை
      5. குற்றியலிகரம்
      6. குற்றியலுகரம்
      7. ஐகாரக்குறுக்கம்
      8. ஒளகாரக்குறுக்கம்
      9. மகரக்குறுக்கம்
      10. ஆய்தக்குறுக்கம்
  3. அளபெடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
      1. உயிரளபெடை
      2. ஒற்றளபெடை
  4. அளபெடையின் பயன் யாது?
    1. உணர்வை வெளிப்படுத்துவதற்கும்...
    2. இனிய ஓசையைத் தருவதற்கும்...
  5. உயிரளபெடை என்றால் என்ன?
    1. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்.
    2. அவ்விடங்களில் நெடில் எழுத்துக்களின் இனமான குறில் எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும்.
  6. உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
      1. செய்யுளிசை அளபெடை
      2. இன்னிசை அளபெடை
      3. சொல்லிசை அளபெடை.
  7. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்கிறோம்
    2. எ.கா.
      1. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்-மொழி முதலில் அளபெடுத்தது
      2. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅர்க்கு வாழிய நெஞ்சே-மொழி இடையில் அளபெடுத்தது
      3. நல்ல படாஅ பறை-மொழி இறுதியில் அளபெடுத்தது
  8. இன்னிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
    2. எ.கா. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
  9. சொல்லிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல், எச்சச் சொல்லாகத் திரிந்து அளவெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்
    2. எடுத்துக்காட்டு
      • உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்
      • நசை- விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என்று அளவு எடுத்தது.  பெயர்ச்சொல் வினையடையாக மாறியது.
  10. ஒற்றளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள் பத்தும் ( ஞ ண ந ம ன ய ல வ ள) ஆய்த எழுத்தும் அளவெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
    2. எடுத்துக்காட்டு:
      • எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃ குவார்க்கில்லை வீடு
  11. சொல் என்றால் என்ன?
    • ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்
  12. சொல்லின் பண்புகளைக் குறிப்பிடுக
    1. இருதிணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்
    2. மூவகை இடங்களிலும் வரும்
    3. உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்
    4. வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்
  13. மூவகை மொழிகள் யாவை?
    1. தனிமொழி
    2. தொடர்மொழி
    3. பொதுமொழி
  14. தனிமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனி மொழி எனப்படும்
    2. எ.கா. கண், படி
  15. பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
    • பதம் இரண்டு வகைப்படும். அவை,
      1. பகுபதம்
        • எ.கா. கண்ணன், படித்தான்
      2. பகாப்பதம்
        • எ.கா. கண், படி
  16. தொடர் மொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழியாகும்
    2. எ.கா. கண்ணன் வந்தான்.
  17. பொதுமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு சொல்  தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
    2. எடுத்துக்காட்டு: எட்டு
      1. 'எட்டு' தனித்து நின்று 8 என்ற எண்ணைக் குறிக்கும்
      2. 'எட்டு'=எள்+து-->எனத் தொடர் மொழியாகப் பிரிந்து நின்று 'எள்ளை உண்' என்று பொருள் தருகிறது
      3. இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
  18. வேங்கை எவ்வாறு பொது மொழியாகிறது?
    1. வேங்கை- தனித்து நின்று மரத்தைக் குறிக்கிறது
    2. 'வேம்+கை' எனப் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்று பொருள் தருகிறது.
    3. இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
  19. தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ  உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
    2. எ.கா. ஈதல், நடத்தல்
  20. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
    • வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
    • நட+தல்=நடத்தல்
  21. எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்.
    2. எ.கா. நடவாமை, கொல்லாமை
  22. முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் ஆதல் முதல்நிலைத் தொழிற்பெயர் ஆகும்.
    2. எடுத்துக்காட்டு: தட்டு, உரை, அடி. இவை முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
  23. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. விகுதி பெறாமல் முதல்நிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
    2. எ.கா. கெடு- கேடு, சுடு-சூடு
  24. வினையாலணையும் பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்
    2. எ.கா. வந்தவர் அவர்தான்.
  25. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

பெருமாள் திருமொழி 2 மதிப்பெண் வினாக்கள்

  1. சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கக் காரணம் என்ன?
    • தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருப்பதால்...
  2. சங்க இலக்கியத்திற்கு இணையாக எவ்வகை இலக்கியங்களில் அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றன?
    • பக்தி இலக்கியங்களில்...
  3. குலசேகர ஆழ்வார், இறைவனை வழிபடுவதற்குக் கூறும் உவமை யாது?
    • மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
  4. குலசேகர ஆழ்வார், இறைவனை எவ்வாறு வழிபடுகிறார்?
    1. மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
    2. வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள அன்னையே! அதுபோன்று உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தைக் எனக்குத் தந்தாலும், அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
  5. வித்துவக்கோட்டு இறைவனைப் பற்றிக் கூறு.
    1. வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
    2. குலசேகர ஆழ்வார், வித்துவக்கோட்டு இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியுள்ளார்.
  6. பெருமாள் திருமொழி -குறிப்பு வரைக.
    1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது
    2. 105 பாடல்கள் உள்ளன
    3. பாடியவர்: குலசேகர ஆழ்வார்
    4. காலம்: எட்டாம் நூற்றாண்டு.

இலக்கணம் பொது 2 மதிப்பெண் வினாக்கள்

  1. திணை என்றால் என்ன? உயர்திணை என்றால் என்ன? அஃறிணை என்றால் என்ன?
    1. திணை என்பது ஒழுக்கம் ஆகும்
    2. உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் உடைய மனிதர்களைக் குறிக்கும்.
    3. அஃறிணை என்பது ஒழுக்கமில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்
  2. பால் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    1. பால் என்பது திணையின் உட்பிரிவு
    2. பால் ஐந்து வகைப்படும். அவை,
      1. ஆண்பால்
      2. பெண்பால்
      3. பலர்பால்
      4. ஒன்றன்பால்
      5. பலவின்பால்.
  3. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
    1. ஆண்பால்
    2. பெண்பால்
    3. பலர்பால்
  4. அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
    1. ஒன்றன்பால்
    2. பலவின்பால்
  5. ஒன்றன்பால் என்றால் என்ன?
    • அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்
  6. பலவின்பால் என்றால் என்ன?
    • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
  7. இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • இடம் மூன்று வகைப்படும். அவை,
      1. தன்மை
      2. முன்னிலை
      3. படர்க்கை
  8. தன்மைப் பெயர்கள் யாவை?
    • நான், யான், நாம், யாம்...
  9. முன்னிலைப் பெயர்கள் யாவை?
    • நீ, நீர், நீவிர், நீங்கள்
  10. படர்க்கைப் பெயர்கள் யாவை?
    • அவன், அவள், அவர்
    • அது, அவை...
  11. வழாநிலை என்றால் என்ன?
    • இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்
  12. வழு என்றால் என்ன?
    • இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
  13. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • வழு ஏழு வகைப்படும் அவை,
      1. திணை வழு
      2. பால் வழு
      3. இட வழு
      4. கால வழு
      5. வினா வழு
      6. விடை வழு
      7. மரபு வழு
  14. செழியன் வந்தது, கண்ணகி உண்டான், நீ வந்தேன், நேற்று வருவான்- இவை எவ்வகை வழுக்கள் என்று கூறு?
    1. செழியன் வந்தது-திணை வழு
    2. கண்ணகி உண்டான்-பால் வழு,
    3. நீ வந்தேன்-இட வழு,
    4. நேற்று வருவான்-கால வழு
  15. ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்- எவ்வகை வழு?
    • வினா வழு
  16. 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்கு, 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடை அளித்தல்-எவ்வகை வழு?
    • விடை வழு
  17. தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந் தோட்டம் என்று கூறுதல் -எவ்வகை வழு?
    • மரபு வழு
  18. வழுவமைதி என்றால் என்ன?
    • இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்
  19. திணை வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
    • "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்
    • இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
  20. பால் வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
    • "வாடா ராஜா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது, பால் வழுவமைதி ஆகும்.
    • இங்கு உவப்பின் காரணமாக பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
  21. இடவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.
  22. காலவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
    • இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாக கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித் தன்மையை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
  23. மரபு வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்"-பாரதியார்
    • குயில் கூவும் என்பதே மரபு. குயில் கத்தும் என்பது மரபு வழு.
    • இங்குக் கவிதையில் இடம் பெற்று இருப்பதால் இது மரபுவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  24. "அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்" என்பது எவ்வகை வழுவமைதி எனக் காட்டு.
    1. இத்தொடர், "அமைச்சர் நாளை விழாவிற்கு வருவார்" என்று அமைதல் வேண்டும்.
    2. அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
    3. ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
  25. "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான். -இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
    • இத்தொடர், கண்ணன் என்பவர் தனக்குத் தானே கூறிக்கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
    • தன்னைத் தன்மையிடத்தில் கூறுவதற்குப் பதிலாக படர்க்கை இடத்தில் கூறியுள்ளார்.
    • இவ்வாறு கூறுவது இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதால், இது இடவழுவமைதியாகும்.
  26. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்-இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
    1. "சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடினோம்" என்று வந்திருக்க வேண்டும்.
    2. இறந்தகாலம் வருவதற்குப் பதிலாக எதிர்காலம் வந்துள்ளது.
    3. எனவே, இது கால வழுவமைதி ஆகும்.
  27. செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.-இது எவ்வகை வழுவமைதி என்று கூறு.
    1. இத்தொடர், "செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறான்" என்று வந்திருக்க வேண்டும்.
    2. ஆண்பால் வருவதற்குப் பதிலாகப் பலர்பால் வந்துள்ளது.
    3. எனவே, இது 'பால் வழுவமைதி' ஆகும்.
  28. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. தந்தை, "மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா" என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களை பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)
    • தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னார்.
  29. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
    • அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பினார்
  30. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. "இதோ முடித்து விடுவேன்" என்பது செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
    • இதோ முடித்து விட்டேன்
  31. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையை படர்க்கையாக மாற்றுக)
    • நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை
  32. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக?
    • குழந்தை அழுகிறது, பார்.

நீதி வெண்பா 2 மதிப்பெண் வினாக்கள்

  1. "கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது? "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது?
    • கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -சங்க இலக்கியம்
    • "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -திருக்குறள்
  2. அறிவு பெறுவது எவ்வாறு?
    • பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச்சென்று அறிவு பெற வேண்டும்.
  3. கல்வியின் பயன் யாது?
    1. அருளைப் பெருக்குவது
    2. அறிவைச் சீராக்குவது
    3. மயக்கம் அகற்றுவது
    4. அறிவுக்குத் தெளிவு தருவது
    5. உயிருக்கு அரிய துணையாய் இருப்பது
    6. இன்பம் சேர்ப்பது
  4. கல்வியை ஏன் கற்க வேண்டும்?
    1. அருளைப் பெருக்குவதால்
    2. அறிவைச் சீராக்குவதால்
    3. மயக்கம் அகற்றுவதால்
    4. அறிவுக்குத் தெளிவு தருவதால்
    5. உயிருக்கு அரிய துணையாய் இருப்பதால்
    6. இன்பம் சேர்ப்பதால் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும்
  5. சதாவதானம் குறிப்பு வரைக.
    1. சதம் என்றால் நூறு என்று பொருள்
    2. அவதானம் என்றால் கவனித்தல்
    3. ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தலே சதாவதானம் எனப்படும்.
  6. செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
    1. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.
    2. ஊர்: கன்னியாகுமரி மாவட்டம்- இடலாக்குடி
    3. 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
    4. சீறாப் புராணத்திற்கு உரை எழுதியவர்
    5. 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப் பெற்றார்.
  7. செய்குத்தம்பிப் பாவலருக்கு அரசு செய்த சிறப்பு என்ன?
    1. இவரது நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும்  அமைக்கப்பட்டுள்ளது
    2. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.